Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

IPL- 2020;கோலியின் பெங்களூரு அணி படுதோல்வி... 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி !

IPL- 2020;கோலியின் பெங்களூரு அணி படுதோல்வி... 97 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி !
, வியாழன், 24 செப்டம்பர் 2020 (23:05 IST)
ஐபிஎல் 2020 கிரிக்கெட் யாரும் கணிக்க முடியாத  கோணத்தில் அதிரடியாக நடைபெற்று வருகிறது.

இன்று ஆர்பிசி டாஸ் எவ்ன்று பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
 
இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் வீரர் கே.எல்.ராகுல் சதம் அடித்தார். அவர் 69 பந்துகளில் சதம் அடித்தார். இத்தொடரில் சதம் அடித்த முதல் வீரர் அவர் ஆவார். மய்ங்க் 26 ரன்களும், நிகோல்லஸ் 17 ரன்களும்,  மேக்ஸ்வெல்  5அன்களும் எடுத்தனர்.

பெங்களூர் அணியில் சிவம் துபே 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  எனவே 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெடுகள் இழப்பிற்கு 207 எடுத்து, பெங்களூர் அணிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து விளையாடிய பெங்களூர் அணியின் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தனர். 109 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல்-2020, : பேட்டிங்கில் அசத்திய பஞ்சாப்- ராகுல் அதிரடி சதம் ...பெங்களூர் அணிக்கு 207 ரன்கள் இலக்கு !