Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்

Webdunia
செவ்வாய், 9 ஜனவரி 2018 (15:04 IST)
தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் யூசப் பதான் 5 மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

 
இந்திய கிரிக்கெட் வீரர் யூசப் பதான் கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டது சோதனையில் தெரியவந்துள்ளது. டெர்பியூட்டலில் உள்ள ப்ரோசெட் என்ற மருந்தை உட்கொண்டுள்ளார். டெர்பியூட்டலின் தடை செய்யப்பட்ட பொருளாக இருந்தாலும் முன் அனுமதி பெற்றால் பயன்படுத்தி கொள்ளலாம்.
 
ஆனால் யூசப் பதான் அணியின் மருத்துவரிடம் அனுமதி பெறாமல் உட்கொண்டுள்ளார். இந்த டெர்பியூட்டலின் பொதுவாக இருமல் மருந்தில் காணப்படும் ஒன்று. இதுகுறித்த பதானின் விளக்கத்தை பிசிசிஐ ஏற்றுக்கொண்டது.
 
யூசப் பதான் கடந்த அக்டோபர் மாதம் முதல் எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில் இவர் 5 மாதம் காலம் இடைநீக்கம் செய்யப்படுவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த தடைகாலம் ஆகஸ்ட் 15ஆம் தேதி 2017 முதல் ஜனவரி 14ஆம் தேதி 2018 வரை ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments