Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அணிக்கு தலா ரூ.80 கோடி... ஜனவரியில் ஐபிஎல் ஏலம்!!

Advertiesment
ஐபிஎல் ஏலம்
, புதன், 20 டிசம்பர் 2017 (16:43 IST)
பிசிசிஐ நடத்தும் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் இந்த ஆண்டுடன் 10 ஆண்டுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில், இந்த சீசன் ஐபிஎல் போட்டி மீது அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகள் மீண்டும் போட்டியில் இடம் பெறயுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் உரிமத்தை இந்த ஆண்டு அதிக விலை கொடுத்து ஸ்டார் ஸ்போட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
 
மேலும், போட்டி நேரங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. போட்டி இரவு 7 மணிக்கு நடத்தலாம் என பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது. இது குறித்த உறுதியான முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை.
 
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 11 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் அடுத்த மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை பிசிசிஐ மூத்த அதிகாரி உறுதிப்படுத்தி உள்ளார். 
 
ஒவ்வொரு அணியும் வீரர்கள் ஏலத்துக்காக செலவிடும் ஒட்டுமொத்த தொகையை ரூ.66 கோடியில் இருந்து ரூ.80 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 விக்கெட்டுக்களை வீழ்த்திய அர்ஜூன் தெண்டுல்கர்: பவுலராக சாதிப்பாரா சச்சின் மகன்?