Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள்!!

இந்தியாவில் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள்!!
, செவ்வாய், 12 டிசம்பர் 2017 (19:24 IST)
2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் 2021 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்கள் இந்தியாவில் நடைபெற உள்ளது.
 
இதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தியா முதல் முறையாக முழுதும் இதை ஏற்று நடத்துகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற 1987, 1996, 2011 ஆகிய உலகக்கோப்பைகளை இந்தியா மற்ற நாட்டு வாரியங்களுடன் இணைந்துதான் நடத்தியது.
 
ஆனால் 2023 ஆம் ஆண்டு முதல் முறையாக தனித்து உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகிறது. அதேபோல் 2021 சாம்பியன்ஸ் டிராபி தொடரும் இந்தியாவில் நடைபெறுகிறது.
 
மேலும், ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதையடுத்து 2019 முதல் ஆப்கானுடன் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளதாம். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துணை கேப்டன் விராட் கோலி: கேப்டன் யார்??