Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு பந்துவீச்சாளர்களை பொளந்து கட்டிய கொல்கத்தா.. 201 இலக்கு..!

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2023 (21:17 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36வது போட்டி இன்று பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் கொல்கத்தா பேட்டிங் செய்தது. 
 
அந்த அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் மிக அபாரமாக விளையாடிய 56 ரன்கள் எடுத்தார். கேப்டன் ரானா 48 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 31 ரன்கள் எடுத்தனர் 
 
பெங்களூரு அணியை பொறுத்தவரை விஜயகுமார் மற்றும் ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த நிலையில் 201 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் பெங்களூர் அணி பேட்டிங் செய்ய உள்ளது. பெங்களூரு அணி இந்த போட்டியில்  வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

ஷமி வெளி உலகத்துக்காக ஷோ காட்டுகிறார்… என் மகளுக்கு அவர் வாங்கிக் கொடுத்ததெல்லாம் இலவசம்… முன்னாள் மனைவி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments