Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ச்சியாக 3வது நாளாக உயரும் பெட்ரோல் டீசல் விலை: இன்றைய விலை என்ன?

Webdunia
வியாழன், 6 மே 2021 (07:42 IST)
5 மாநில தேர்தல் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது தேர்தல் முடிவடைந்ததை அடுத்து கடந்த 3 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது 
 
நேற்று முன்தினம், நேற்று ஆகிய இரண்டு நாட்களிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இன்றைய விலை உயர்வு சற்று அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.90 ரூபாய்க்கும், டீசல் விலை 26 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்தப்படுவதாக கூறப்பட்டாலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபோது அதிகப்படுத்திய பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த வேண்டுகோளை மத்திய மாநில அரசுகள் ஏற்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments