Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீண்ட இடைவெளிக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

நீண்ட இடைவெளிக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
, செவ்வாய், 4 மே 2021 (07:25 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது என்பது தெரிந்ததே. ஐந்து மாநில தேர்தல் காரணமாகத்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை என்றும் தேர்தல் முடிவுகள் வெளியானதும் மீண்டும் உயரும் என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த செய்திகளின் படி சரியாக ஐந்து மாநில தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானவுடன் தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம் 
 
சென்னையில் பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் உயர்ந்து, பெட்ரோல் லிட்டர் விலை ரூ.92.55 காசுகள் என விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் விலை ரூ.85.90 காசுகளாகவும் விற்பனையாகி வருகிறது. 
 
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தற்போது உயர்ந்து கொண்டே இருப்பதால் இனி தொடர்ச்சியாக பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் உயர வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

15.41 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!