Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலை மறுத்த பெற்றோர்; காதலனுடன் பள்ளி சிறுமி தற்கொலை!

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (09:39 IST)
திருப்பூரில் சிறுமியின் காதலை பெற்றோர் மறுத்ததால் காதலனுடன் சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள கைக்காட்டி புதூர் பகுதியை சேர்ந்தவர் 23 வயதான அஜய். இவரும் அதே பகுதியை சேர்ந்த 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது பள்ளி சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரிய வர அவர் சிறுமியை கண்டித்துள்ளார். ஆனால் காதலை பிரிய மனமில்லாத சிறுமி திடீரென வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். சிறுமியை காணததால் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் திருப்பூர் ஆத்துப்பாளையம் செல்லும் சாலை அருகே உள்ள பயன்படாமல் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

நேரில் சென்று உடலை மீட்ட போலீஸார் அது காணாமல் போன சிறுமி என கண்டறிந்துள்ளனர். மேலும் கிணற்றில் தேடியதில் சிறுமியின் காதலன் அஜய் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments