Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருப்பூரில் நகைக்கொள்ளை; மகாராஷ்டிராவில் பதுங்கல்! – சிக்கிய திருடர்கள்!

Advertiesment
Tiruppur
, ஞாயிறு, 6 மார்ச் 2022 (11:16 IST)
திருப்பூர் நகைக்கடையில் கொள்ளையடித்த திருடர்கள் மகாராஷ்டிராவில் பிடிபட்டுள்ளனர்.

திருப்பூர் யூனியன் மில் சாலையில் நகைக்கடை மற்றும் அடகுக் கடை வைத்து நடத்தி வருபவர் ஜெயக்குமார். கடந்த வியாழக்கிழமை வழக்கம்போல இரவு கடையை பூட்டி விட்டு மறுநாள் காலை கடையை திறந்தபோது அங்கிருந்த தங்க நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்துள்ளது. மொத்தமாக 3 கிலோ தங்கம், 9 கிலோ வெள்ளி மற்றும் 25 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவை போலீஸார் ஆராய்ந்த நிலையில் 4 பேர் அப்பகுதியில் நடமாடுவது பதிவாகியிருந்துள்ளது. அதே நான்கு பேரின் உருவம் திருப்பூர் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியிருந்துள்ளது. இதுகுறித்த விசாரணையில் வட மாநிலத்தை சேர்ந்த 4 பேர் மகாராஷ்டிராவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பீகாரை சேர்ந்த அந்த நான்கு பேரும் நாக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தமிழக அழைத்துவரப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருமணம் செய்தால் ரூ.1.67 லட்சம் பரிசு: அதிரடி அறிவிப்பு!