Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

க்ளாஸ் லீடர் பதவி பறிப்பு!?; மன உளைச்சலில் மாணவி தற்கொலை! – நாமக்கலில் அதிர்ச்சி!

Advertiesment
Tamilnadu
, திங்கள், 14 மார்ச் 2022 (09:12 IST)
நாமக்கலில் பள்ளி மாணவி ஒருவர் பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு சீத்தாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாணவி அர்ச்சனா. இவர் திருசெங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளி சென்ற அர்ச்சனா பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதோடு பள்ளி நிர்வாகத்திடம் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அர்ச்சனாவை அவரது வகுப்பு ஆசிரியர் செய்யாத தவறுக்கு கண்டித்ததாகவும், வகுப்பு தலைவி பதவியிலிருந்து நீக்கியதாகவும்,அதனால் அர்ச்சனா தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறி அர்ச்சனாவின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

பின்னர் கல்வித்துறை அதிகாரிகள், போலீஸார் நேரில் சென்று பேசியதை அடுத்து அவர்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உக்ரைனில் போர் நிறுத்தப்படுமா? – இன்று இரு நாடுகள் மீண்டும் பேச்சுவார்த்தை!