Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோவையை தொடர்ந்து திருப்பூரிலும் பன்றி காய்ச்சல்! – மக்கள் அதிர்ச்சி!

Advertiesment
Tamilnadu
, புதன், 17 நவம்பர் 2021 (13:51 IST)
கோவையில் சில நாட்கள் முன்னதாக இருவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் தற்போது திருப்பூரிலும் பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் தீவிரமாக இருந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்துவது அதிகப்படுத்தப்பட்டதன் மூலம் மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் பன்றி காய்ச்சல் பாதிப்புகள் தமிழகத்தில் ஆங்காங்கே ஏற்பட்டு வருகிறது.

முன்னதாக சில நாட்கள் முன்பு கோவையில் இருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதியான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது திருப்பூரில் 44 வயது நபர் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் உறுதியாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வீட்டை சுற்றி உள்ளவர்களுக்கு காய்ச்சல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் பன்றி காய்ச்சல் உறுதியாகி வருவது மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் கனமழை பெய்ய துவங்கியது - மறுநாள் வரை நீடிக்க வாய்ப்பு!