Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கொடிகம்பம் வைத்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை”.. ஸ்டாலின் குற்றச்சாட்டு

Arun Prasath
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (13:24 IST)
கோவையில் அதிமுக கொடி கம்பம் விழுந்து பெண் கால் இழந்த நிலையில், அந்த கொடிக்கம்பத்தை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் சமீபத்தில் முதல்வரின் வருகையை ஒட்டி பீளமேடு அவிநாசி சாலையின் நடுவே கொடிகம்பம் வைக்கப்பட்டது. அந்த கொடிகம்பம் அனுராதா என்ற பெண் சாலையில் சென்றுகொண்டிருந்த போது விழுந்தது. அனுராதா நிலை தடுமாறி விழுந்ததில் பின்னால் வந்த லாரி அவரின் கால்கள் மீது ஏறியதில் இரண்டு கால்களும் நசுங்கின.

இதனை தொடர்ந்து கோவையில் சிகிச்சை பெற்று வந்த அனுராதாவின் இடது காலை மருத்துவர்கள் நீக்கினர். வலது காலையும் நீக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் கால் இழந்த அனுராதாவிற்கு ஆறுதல் கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் “கோவையில் அதிமுக கொடிகம்பம் விழுந்து பெண் கால் இழந்த நிலையில் லாரி ஓட்டுநர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த கொடிக்கம்பம் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் அவசர ஆலோசனை.. முதல்வர் ஆகிறாரா?

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது டெஸ்லா கார்.. விலை எவ்வளவு தெரியுமா?

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments