Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை தண்ணீர் தரமற்றது.. ஆய்வில் அதிர்ச்சி

Arun Prasath
ஞாயிறு, 17 நவம்பர் 2019 (12:58 IST)
சென்னை பகுதியில் குழாய் மூலம் விநியோக்கிக்கப்படும் தண்ணீர் தரமானது இல்லை என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீர் தரமானதாக இல்லை என மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதிலும் 20 மாநில தலைநகரங்களில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரின் மாதிரிகளை இந்திய தர அமைப்பு ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் சென்னை பகுதியில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீரில் குளோரட், புளூரைட், போரான் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இருக்கின்றன எனவும், இதனால் நீரி தரம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கை சொல்கிறது என மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.

மேலும் சென்னை போலவே சண்டிஹர், குவாஹட்டி, பெங்களூர், காந்திநகர், ஜெயப்பூர், லக்னோ, உள்ளிட்ட நகரங்களிலும் குடிநீர் தரம் குறைந்து காணப்படுவதாக அந்த அறிக்கை கூறுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments