Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏன்? ரெய்ட் விட்ட தலைமை!!

Webdunia
செவ்வாய், 7 ஜனவரி 2020 (15:34 IST)
உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கண்ட சரிவை குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தியுள்ளனர். 
 
கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றதில் திமுக பெரும்பானமையான இடங்களில் வெற்றி பெற்றது. 
 
உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுகவைவிட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது அதிமுகவுக்கு கடும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. மேலும் இந்த தோல்விக்கு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது காரணம் என கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், தலைமையில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தின் போது  உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காதது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதோடு நிர்வாகிகளிடையே தோல்வி குறித்து காரசாரா விவாதங்களும் நடந்ததாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

விஷச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகம்: ஆய்வுக்கு பின் குஷ்பு பேட்டி..!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம்..! சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றம்..!!

துர்கா ஸ்டாலினின் சகோதரர் ராஜமூர்த்திக்கு தமிழக அரசின் முக்கிய பதவி.. பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments