Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செங்கோட்டையனுக்கு Y கொடுத்தால் ஈபிஎஸ்-க்கு Z+ கொடுக்க வேண்டும்: வைகைச்செல்வன்

Siva
திங்கள், 31 மார்ச் 2025 (09:44 IST)
அதிமுக பாஜக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். இதனை அடுத்து அமித்ஷாவின் பேட்டிகளிலும் அதிமுகவுடன் கூட்டணி உறுதி என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியை அடுத்து செங்கோட்டையன் திடீரென டெல்லி அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது உள்ளது.

மேலும் செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல் வெளியாகியது. இதைக் கொண்டே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைசெல்வனிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர், "அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பிரிவு பாதுகாப்பு வழங்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிப்லி புகைப்படம் எடுத்தால் சைபர் குற்றமா? காவல்துறை எச்சரிக்கை..!

2 வருடங்கள் தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜி சகோதரருக்கு உடனே ஜாமின்.. நீதிபதி உத்தரவு..!

இன்றும் நாளையும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

அடுத்த கட்டுரையில்
Show comments