Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்களுக்கு தொடர் விடுமுறையா??

Webdunia
சனி, 30 ஏப்ரல் 2022 (12:03 IST)
மே 2 ஆம் தேதியை விடுமுறையாக இல்லாமல் உள்ளது, அன்று விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. 

 
மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தையும், மே 3 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையையும் கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இந்நிலையில் மே 2 ஆம் தேதியை விடுமுறையாக இல்லாமல் உள்ளது. எனவே அன்று விடுமுறை அளிக்கப்படுமா என எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. 
 
இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை என்னும் ஈகைத் திருநாள் வரும் மே 3-ஆம் தேதி கொண்டாடப்படவிருகிறது. வரும் ஏப்ரல் 30, மே 1 மற்றும் மே 3 ஆகிய நாட்கள் விடுமுறை நாட்களாக உள்ளன. இடையில் மே 2 திங்கள்கிழமை மட்டும் வேலை நாளாக உள்ளது.
 
அன்றைய தினம் அரசு விடுமுறை அறிவித்து விட்டு, அதற்கு ஈடாக வேறு ஒரு நாளை வேலை நாளாக அறிவித்தால் ஈகைத் திருநாளை கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வசதியாக அமையும். எனவே முதல்வர் இதுகுறித்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு ஜவாஹிருல்லா அந்த கடிதத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீலகிரி, கோவை மலை பகுதியில் முதல் மிக கனமழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம்.. அவையில் பரபரப்பு..!

சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு..! ஜூலை 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

10.5% இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சருடன் விவாதிக்க தயார்.! சவால் விடும் அன்புமணி..!!

சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து பா.ம.க எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments