’டீ ’ கடையில் டீ போட்டு தரும் ’மேற்குவங்க முதல்வர்’ ... வைரலாகும் வீடியோ

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (19:32 IST)
அரசியல் தலைவர்கள் சமீபகாலமாக மக்களோடு மக்களாக இருப்பதற்கு அடையாளமாக சாலையோரக் கடைகளில்  நின்று டீ குடிப்பது. விவசாயத்தில் மக்களுக்கு உதவுவது. மக்களுடன் அமர்ந்து அன்னதானம் சாப்பிடுவது என்று செயல்படுவது வழக்கம்.
அதிலும் தேர்தல் என்று வந்து வந்துவிட்டால் இது இன்னும் பலமடங்கு அதிகமாக இருக்கும். நம் தமிழ்நாட்டில் திமுக தலைவர் ஸ்டாலின் நமக்கு நாமே திட்டம் வெகு பிரபலம். தற்போது அதிமுக தலைவர்கள் மற்றும் தமிழக முதல்வர் மக்களிடம் நேரில் சென்று வருவது அதிகரித்து வருகிறது.
 
நம் நாட்டின் நரேந்திர மோடி கூட டீ போட்டுக் கொடுத்து, இன்று உயர்ந்த பதிவியில் அமர்ந்து ஆட்சி புரிகிறார். இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரும் தேர்தலுக்கு வியூகம் வகுத்து வருகிறார். குறிப்பாக அவருக்கு பிஜேபின் வளர்ச்சி பெரும் தலைவலியை உண்டாக்கிஉள்ளது.
இந்நிலையில் மக்களை நேரில் சந்திக்கும் பொருட்டு,இன்று அம்மாநிலத்தில் உள்ள கடற்கரை பகுதியான திகாவுக்கு சென்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அங்குள்ள டீ கடைக்கு சென்று தானே டீ போட்டு மக்களுக்கு கொடுத்தார். இந்த செய்தி மற்றும் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று நாடுகள் அரசு பயணமாக செல்லும் பிரதமர் மோடி.. எந்தெந்த நாடுகள்?

ஈரோடு விஜய் நிகழ்ச்சிக்கு எத்தனை மணி நேரம் அனுமதி? செங்கோட்டையன் தகவல்..!

ஈரோட்டில் விஜய் மக்கள சந்திப்பு!.. கண்டிஷனோடு அனுமதி கொடுத்த போலீஸ்...

கேரள உள்ளாட்சி தேர்தல் தோல்வி: சபதத்தை நிறைவேற்ற மீசையை எடுத்த கம்யூனிஸ்ட் தொண்டர்

மெஸ்ஸி நிகழ்வின் குளறுபடி: மம்தா பானர்ஜி கைது செய்யப்பட வேண்டும் - அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments