Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்கே இருக்கிறார் ப.சிதம்பரம்? சிபிஐ-க்கு கிடைத்த ஹிண்ட்!

Webdunia
புதன், 21 ஆகஸ்ட் 2019 (19:18 IST)
ப.சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்ற தகவல் சிபிஐ க்ளு கிடைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.   
 
இதனைடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் ப.சிதம்பரம் தற்போது எங்கே இருக்கின்றார் என்று தெரியாத நிலையில் இன்று அவருடைய முன்ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 
உச்சநீதிமன்றம் இது குறித்து உடனடியாக உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்த நிலையில், ப.சிதம்பரத்தை எப்போது வேண்டுமானாலும் கைது செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ப.சிதம்பரத்தின் கார் ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.  
 
அந்த விசாரணையில், நேற்று மாலை காரில் வந்த ப.சிதம்பரம் பாதி வழியிலேயே இறங்கியதாகவும், அதன் பிறகு எங்கு சென்றார் என தெரியாது எனவும் ஓட்டுநர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். 
இந்நிலையில், தற்போது சிபிஐ-க்கு ப.சிதம்பரம் எங்கு இருக்கிறார் என்ற க்ளூ கிடைத்துள்ளதாம். ஆம், அவர் தன்னுடைய வழக்கறிஞர் நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கி உள்ளதாக சிபிஐ சந்தேகிக்கிறது. இன்று இரவு அந்த வழக்கறிஞர் வீட்டில் சிபிஐ சோதனை நடத்த வாய்ப்புள்ளது எனவும் தெரிகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments