இன்று உங்கள் காரில் திருடினோம், நாளை வீட்டுக்கே வந்து அடித்து உதைப்போம்: மிரட்டல் விடுத்த கொள்ளையர்கள்..!

Siva
திங்கள், 22 செப்டம்பர் 2025 (14:06 IST)
சண்டிகரில் விஷால் என்பவரின் கார்  கண்ணாடியை உடைத்து, ரூ.85,000 ரொக்கம் மற்றும் தங்க நகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்கள், இன்று காரின் கண்ணாடியை மட்டுமே உடைத்துள்ளோம். நாளை உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அடித்து, வீட்டையும் உடைப்போம்" என்று மிரட்டிவிட்டு சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,.
 
செப்டம்பர் 19 அன்று திடீரென கார் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டு விஷால் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது நான்கு அல்லது ஐந்து பேர் தனது காரின் கண்ணாடியை உடைப்பதை கண்ட அவர், அவர்களை பிடிக்க முயன்றுள்ளார்.
 
ஆனால் திருடர்கள் காரில் இருந்த ரூ.85,000 ரொக்கம், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு புத்தகம்  உள்ளிட்ட முக்கியமான ஆவணங்கள் இருந்த பணப்பை, மற்றும் அவரது மனைவியின் தங்க கம்மல் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிவிட்டனர். 
 
அப்போது, "இன்று காரின் கண்ணாடியை மட்டுமே உடைத்துள்ளோம். நாளை உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அடித்து, வீட்டையும் உடைப்போம்" என்று மிரட்டிவிட்டு, திருடர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
 
இதுகுறித்து விஷால் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் மூலம் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை - டி.டி.வி. தினகரன் திடீர் சந்திப்பு: கூட்டணியில் புதிய திருப்பம்?

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

டிஜிட்டல் கைதில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த எம்.பி.யின் மனைவி.. உடனடியாக மீட்கப்பட்ட பணம்..!

பெண் பத்திரிகையாளரை அவமதித்த பா.ஜ.க. தலைவர்: கேரள பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த கார்.. அரசு தான் பொறுப்பு என கார் ஓனர் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments