பிகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை: திடீரென பின்வாங்கிய பிரசாந்த் கிஷோர்..!

Mahendran
புதன், 15 அக்டோபர் 2025 (10:45 IST)
தேர்தல் வியூக வல்லுநரும், ஜன சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர், வரவிருக்கும் பிகார் சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என்று திடீரென அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு பிகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
முன்னதாக, ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை எதிர்த்து தான் நேரடியாக களமிறங்க போவதாக அவர் சவால் விடுத்திருந்தார். ஆனால், தற்போது தனது ஜன சுராஜ் கட்சியின் நிர்வாகிகள் மட்டுமே போட்டியிடுவார்கள் என்று அவர் அறிவித்துள்ளார்.
 
பிரசாந்த் கிஷோரின் இந்த திடீர் பின்வாங்கல், அவர் முன்னணி தலைவரை எதிர்ப்பதில் இருந்து விலகுகிறாரா அல்லது கட்சியின் வெற்றிக்கு பின்னணியில் இருந்து வியூகம் வகுக்க விரும்புகிறாரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
 
பிகாரில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஜன சுராஜ் கட்சியின் தாக்கம் போட்டியில்லை என்ற முடிவால் இனி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments