Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்தி எதிரொலி: ஒரே நாளில் ஆரம்பிக்கப்பட்ட 1500 தபால் வங்கி கணக்குகள்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (22:19 IST)
பெரும்பாலும் வதந்திகளால் தீமைகள்தான் ஏற்பட்டு வரும் நிலையில் மூணாறு பகுதியில் ஒரு வதந்தியால் பல மக்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது 
 
மூணாறில் கடந்த சனிக்கிழமை அன்று தபால் வங்கியில் கணக்கு தொடங்கினால் பிரதமர் அந்த கணக்கில் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வார் என்ற ஒரு வதந்தி பரவியது. இந்த வதந்தி சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் உள்பட பலவிதங்களில் மிக வேகமாக பரவியதை அடுத்து மறுநாள் காலை 8 மணிக்கு தபால் நிலையம் முன்பு ஆயிரக்கணக்கானோர் வங்கிக் கணக்குகளைத் தொடங்க குவிந்தனர் 
 
இதுகுறித்து தகவல் அறிந்த தபால் நிலைய ஊழியர்கள் இது முற்றிலும் வதந்தி என்றும், இப்படி ஒரு சலுகை அறிவிப்பு அரசிடமிருந்து வெளிவரவில்லை என்று கூறியும் மக்கள் அதனை ஏற்கவில்லை. இதனை அடுத்து நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகவே தபால் நிலைய அதிகாரிகள் காவல் துறையினரை உதவிக்கு அழைத்தனர். காவல்துறையினரும் இது முற்றிலும் வதந்தி என்று கூறிய போதிலும் அதற்கு முன்னரே ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டுவிட்டது. இறுதியில் அன்றைய ஒரே நாளில் 1,500 புதிய தபால் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
இந்த நிலையில் மறுநாள் தபால் வங்கிக் கணக்கு தொடங்கும் நபர்களுக்கு இலவச வீடு தரப்படும் என்ற வதந்தி பரவியது. இதனை அடுத்து மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் தபால் வங்கி கணக்குகளை தொடங்கினர். ஆனால் இந்த வதந்தியால் ஒரு நன்மையும் ஏற்பட்டுள்ளது. வங்கி கணக்கு தொடங்கிய ஆயிரக்கணக்கானோர் இனி தங்களால் முடிந்த அளவு அந்த கணக்கில் சேமிக்க தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments