Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கால்பந்து கேலரி உடைந்து 200 பேர் காயம்: கேரளாவில் விபரீதம்!

கால்பந்து கேலரி உடைந்து 200 பேர் காயம்: கேரளாவில் விபரீதம்!
, ஞாயிறு, 20 மார்ச் 2022 (14:00 IST)
கால்பந்து கேலரி உடைந்து 200 பேர் காயம்: கேரளாவில் விபரீதம்!
கேரளாவில் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த போட்டியை காண்பதற்காக ஏராளமான ரசிகர்கள் கேலரியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென கேல்ரி சரிந்து விழுந்ததால் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
கேரள மாநிலத்திலுள்ள மலப்பாடு என்ற பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் கால்பந்து போட்டி நடைபெற்று வந்தது. இந்த போட்டியை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் கண்டு ரசித்தனர். அப்போது திடீரென ஒரு பக்கத்தில் இருந்த கேலரி சரிந்து விழுந்தது
 
இதனை அடுத்து இடிபாடுகளில் சிக்கி 200 பேர் வரை காயமடைந்ததாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
மூங்கில் உள்ளிட்ட மரக்கட்டைகளை பயன்படுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த இந்த கேலரியில் அளவுக்கு அதிகமான நபர்கள் உட்கார்ந்து இருந்ததே இந்த விபத்திற்கு காரணம் என்றும், இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கை, கால் உடைந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக சிட்டுக் குருவிகள் தினம்: சென்னையில் ஒரு குருவிகள் சரணாலயம்