Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 நாட்களுக்கு மணிப்பூரில் இன்டர்நெட் இணைப்பு கட்.. அதிரடி உத்தரவு..!

Siva
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (17:11 IST)
மணிப்பூரில் நாளுக்கு நாள் போராட்டம் மற்றும் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் 5 நாட்களுக்கு இன்டர்நெட் கட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் இந்த மோதல் வன்முறையாக மாறி பெரும் உயிர் இழப்புகளும் ஏற்பட்டன. இதையடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது மீண்டும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் மணிப்பூரில் நடக்கும் வன்முறை செய்திகள் இணையத்தின் மூலம் பரவி வருவதாகவும் சில செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு வதந்திகளாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து மணிப்பூரில் ஐந்து நாட்கள் இன்டர்நெட் கட் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மொபைல் நெட், பிராட் பேண்ட், விபிஎன் என அனைத்து விதமான இன்டர்நெட் மணிப்பூரில் ஐந்து நாட்களுக்கு இணைப்பு இருக்காது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments