Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நாள் போராட்டம் எதிரொலி: ஆசிரியராக மாறிய மாணவி..!

Siva
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (17:04 IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வரும் நிலையில் கோவில்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவி ஆசிரியராக மாறி சக மாணவ மாணவிகளுக்கு பாடம் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக தங்களுடைய கோரிக்கைகளை அரசிடம் முன் வைத்த நிலையில் அரசு அந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் செப்டம்பர் 10ஆம் தேதியான இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக ஆசிரியர்கள் அறிவித்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஒரு சில ஆசிரியர்கள் மட்டுமே இன்று பணிக்கு வந்திருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கோவில்பட்டியில் உள்ள தொடக்கக்கல்னில் பள்ளி ஒன்றில் ஆசிரியர் போராட்டத்தால் ஆசிரியர் யாருமே வரவில்லை என்பதால் திடீரென மாணவி ஒருவர் தனது சக மாணவ மாணவியர்களுக்கு பாடம் எடுத்து ஆசிரியராக மாறி உள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஒரு துயரம்! ஆற்றில் இடிந்து விழுந்த பாலம்! பலர் மாயம்! - மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

இஸ்ரேல் ஒரு ரவுடி நாடு: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்..!

உண்மையான "அப்பா"க்களுக்கும் எனது வாழ்த்துக்கள்: முதல்வரை சீண்டுகிறாரா ஈபிஎஸ்?

ஸிப்லைனில் சென்றபோது அறுந்த கயிறு.. பாறைகளில் விழுந்த த்ரிஷா! - அதிர்ச்சி வீடியோ!

கள் எடுக்கும் போராட்டத்தை தொடர்ந்து மாடு மேய்க்கும் போராட்டம்! - சீமான் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments