வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

Siva
திங்கள், 3 நவம்பர் 2025 (21:12 IST)
தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு (SIR) எதிராக, ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த மனுவில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்கு தடை விதித்து, அப்பணிகளை உடனடியாக நிறுத்திவைக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது.
 
நேற்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சிக் கூட்டத்தில், இந்த திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்தே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
கார் மாநிலத்தில் இதேபோன்ற SIR-க்கு எதிரான வழக்கில் இறுதி தீர்ப்பு வராத நிலையில், தமிழகத்தில் இதை மேற்கொள்வது வாக்காளர்களின் உரிமைக்கு எதிரானது என திமுக சுட்டிக்காட்டியுள்ளது.
 
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ இந்த மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு நவம்பர் 6 அல்லது 7 ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments