Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா ஒரு மினி பாகிஸ்தான்.. ராகுலுக்கு தீவிரவாதிகள் வாக்களித்ததாக பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு..

Siva
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (12:44 IST)
கேரளா ஒரு மினி பாகிஸ்தான் என்றும், அதனால் தான் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகிய தீவிரவாதிகளுக்கு ஓட்டு போட்டுள்ளனர் என்றும் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் நிதிஷ் ராணா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கும் பாஜகவை சேர்ந்த நிதீஷ் ராணா, முதன்முறையாக அமைச்சராக இருப்பவர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.    கேரளா ஒரு மினி பாகிஸ்தான் ஆக மாறிவிட்டது என்று தெரிவித்தார். அதனால் தான், ராகுல் காந்திக்கும், அவரது சகோதரி பிரியங்கா காந்திக்கும், அங்குள்ள தீவிரவாதிகள் ஓட்டு போட்டுள்ளனர் என்றும் கூறினார். 
 
"நான் உண்மையைத்தான் சொல்கிறேன், தீவிரவாதிகளின் ஆதரவால் தான் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய இருவரும் எம்பி ஆகியுள்ளனர்," என்று அவர் கூறியுள்ளார்.
 
அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments