இது பாகிஸ்தான் அல்ல, பீகார்.. புர்கா அணிந்து ஓட்டு போட பெண்கள் குறித்து மத்திய அமைச்சர்..!

Siva
வியாழன், 6 நவம்பர் 2025 (11:03 IST)
பீகாரில் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்கள், புர்கா அணிந்து வரும் வாக்காளர்கள் மீது சோதனை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தது பெரும் அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
அவர்  "சந்தேகத்திற்குரிய புர்கா அணிந்த வாக்காளர்கள் கண்டிப்பாக சோதிக்கப்படுவார்கள்; அதற்கென அதிகாரிகள் கண்காணிக்க காத்திருப்பார்கள்" என்று அவர் வலியுறுத்தினார்.
 
மேலும் "பீகாரில் ஷரியா சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது, இது பீகார், பாகிஸ்தான் அல்ல" என்று அவர் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
 
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தனது அரசியல் உரைகளில் இதுபோன்ற கருத்துகளை திரும்பத் திரும்பப் பயன்படுத்துவது வழக்கம். இதற்கு முன்னரும் பல தேர்தல் காலங்களில் இவர் இதேபோன்ற அறிக்கைகளை வெளியிட்டுள்ளார்.
 
இந்த முறை அவர் வெளியிட்ட "இது பாகிஸ்தான் அல்ல" என்ற கருத்து, எதிர்க்கட்சிகள் மத்தியில் கடுமையான எதிர்ப்பைப் பெற்றுள்ளது.
 
எதிர்க்கட்சிகள் இந்த கருத்துக்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன. சிறுபான்மை சமூகத்தை இலக்கு வைத்து, தேர்தல் விதிகளை மீறும் வகையில் அவர் பேசியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி தான் காரணமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வு: வடகிழக்குப் பருவமழை தீவிரம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மனசாட்சி அரசியல் செய்யாமல் போய்விடுங்கள்: குஷ்பு

பெண்களுக்கான அரசு என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்: ஈபிஎஸ்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments