Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசியா? வாய்ப்பில்ல ராஜா!!!

அமெரிக்க தேர்தலுக்கு முன் கொரோனா தடுப்பூசியா? வாய்ப்பில்ல ராஜா!!!
, வியாழன், 1 அக்டோபர் 2020 (15:41 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர் கொரோனா தடுப்பூசிகள் கொண்டுவரப்படும் என் ட்ரம்ப் தெரிவித்ததை மறுத்துள்ளது தடுப்பூசி ஆராய்ச்சியில் ஈடுபடும் நிறுவனம்.

கொரோனா அதிக பாதித்த நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இது எல்லாவற்றுக்கும் ட்ரம்ப் ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையேக் காரணம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்குள் கொரோனா தடுப்பூசி கொண்டுவரப்படும் என ட்ரம்ப்பின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டு இருந்தது.

ஆனால் அதற்கான வாய்ப்பில்லை என ஆராய்ச்சியில் ஈடுபடும் 11 நிறுவனங்களில் ஒன்றான மாடர்னா தெரிவித்துள்ளது.  இது சம்மந்தமாக பேசியுள்ள மாடர்னா நிறுவனத்தின் இயக்குனர் தேர்தல் நாளுக்கும் தடுப்பூசி நடைமுறைக்கும் சம்மந்தம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அதனால் அதிகமாகக் கூடும் கூட்டம்!