Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிடச்ச கேப்பில் வாரிவிட்ட ட்ரம்ப்: போலி எண்ணிக்கையை காட்டுகிறதா இந்தியா?

கிடச்ச கேப்பில் வாரிவிட்ட ட்ரம்ப்: போலி எண்ணிக்கையை காட்டுகிறதா இந்தியா?
, புதன், 30 செப்டம்பர் 2020 (10:22 IST)
இந்தியா உயிரிழப்பு குறித்த நேரடி எண்ணிக்கையை வழங்குவது இல்லை அதிபர் தேர்தல் பிரச்சார விவாதத்தில் ட்ரம்ப் பேச்சு. 
 
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கொரோனா பாதிப்பையும் மீறி ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடனும் மற்றும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ட்ரம்பும் பரபரப்பாக தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
தேர்தலுக்கு முன்னதாக வேட்பாளர்களுக்கு இடையே 3 முறை நேருக்கு நேர் விவாதம் நடைபெறும், அந்த வகையில் முதலாவது விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஜோ பைடன், கொரோனா உயிரிழப்பில் மற்ற நாடுகளை விட அமெரிக்கா மோசமான நிலையில் உள்ளது என கூறினார். 
 
இதற்கு ட்ரம்ப், அது சீனாவின் தவறு. சீனா, இந்தியா போன்ற நாடுகள் உயிரிழப்பு குறித்த நேரடி எண்ணிக்கையை வழங்குவது இல்லை, அங்கு உண்மையில் எத்தனை உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது என யாருக்குமே தெரியாது என பதில் அளித்தார். அதிபர் ட்ரம்ப்பின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுபானம் கொடுத்து பெண்கள் வன்கொடுமை; உலக சுகாதார ஊழியர்கள் அட்டூழியம்!