43 நாட்களாக நீடித்து வந்த அமெரிக்க அரசின் முடக்கம்.. டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு..!

Mahendran
வியாழன், 13 நவம்பர் 2025 (10:42 IST)
சுமார் 43 நாட்களாக நீடித்து வந்த அமெரிக்க அரசின் முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது.  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மசோதாவில் கையெழுத்திட்டார். இதன்மூலம் அனைத்து துறைகளும் மீண்டும் செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிதி மசோதா நிறைவேற, ஜனநாயக கட்சியின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சுமார் ஒன்றரை மாத காலமாக அரசு முடங்கியிருந்தது. இதனால், விமான போக்குவரத்து உள்ளிட்ட பல அத்தியாவசிய பணிகளில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
 
கட்சியின் நிலைப்பாட்டை மீறி, சில ஜனநாயக கட்சி செனட் உறுப்பினர்கள் சமரசம் செய்துகொள்ள முன்வந்ததால், செனட் அவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
 
மசோதாவில் கையெழுத்திட்ட டிரம்ப், "சட்டவிரோத குடியேற்றத்துக்காக கோடிக்கணக்கான டாலர்களை பறிக்க முயன்ற ஜனநாயக கட்சியினருக்கு மிரட்டி பணம் பறிப்பதற்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்ற தெளிவான செய்தியை சொல்லிவிட்டோம்," என்று அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி தாக்குதல் சதி: 4 நகரங்கள் குறி, 2,000 கிலோ வெடிபொருள் கொள்முதல் – NIA விசாரணை தகவல்

அதிகாலை 2:45 மணிக்கு வேலை கொடுத்த மேலதிகாரி.. செய்யாததால் நடவடிக்கை: இளம்பெண்ணின் ஆதங்க பதிவு..!

அமெரிக்காவுக்கு வாங்க.. அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளித்துவிட்டு தாய்நாட்டுக்கு சென்றுவிடுங்கள்: புதிய H-1B விசா கொள்கை

பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற திருநங்கை.. செய்தியாளர் காப்பாற்றிய சம்பவம்.. போராட்டத்தில் பரபரப்பு..!

இன்று வெளியான இன்னொரு கருத்துக்கணிப்பு.. பீகாரில் ஆட்சி மாற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments