Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

Mahendran
செவ்வாய், 12 ஆகஸ்ட் 2025 (17:28 IST)
ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் உற்பத்தி ஆலையின் மீது உக்ரைன் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதால் தீப்பற்றி எரிவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல், ரஷ்யாவின் ஒரென்பர்க் பகுதியில் உள்ள அந்த ஆலை மீது நேற்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
 
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில், பொதுமக்கள் ஏராளமான ட்ரோன்கள் பறந்ததை பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யாவின் விமானப் படை, உக்ரைனின் 36 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ராக்கெட், விண்வெளித் துறை மற்றும் போர் ஆயுதங்கள் தயாரிப்பில் ஹீலியம் வாயு அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே, இந்த ஆலை மீது நடத்தப்பட்ட தாக்குதல், ரஷ்யாவின் ராணுவ உற்பத்திக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல், ரஷ்யா-உக்ரைன் போரை இன்னும் நீட்டிக்கும் என அஞ்சப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

மீண்டும் மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம்.. விலைப்பட்டியல் அரசிடம் சமர்ப்பிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments