Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு.. எங்களை காப்பாற்றுங்கள் என ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!

Siva
வெள்ளி, 2 மே 2025 (07:44 IST)
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என்றும், இந்திய ராணுவம் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தானை தாக்கலாம் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், கடைசி முயற்சியாக போரை நிறுத்த பாகிஸ்தான் ஐநாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், "ஐநா நினைத்தால் இந்த போரை தடுக்கலாம். எனவே இந்திய தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்றும் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
 
பாகிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரின் தலைவர் சுல்தான் சவுத்ரி என்பவர் ஐநாவுக்கு எழுதிய கடிதத்தில், "ஏதாவது செய்தி எங்களை காப்பாற்றுங்கள். ஐநா நினைத்தால் இந்த போரை தடுத்து, நடக்கக்கூடிய விபரீதத்தையும் தடுக்கலாம். ஐநா பொதுச் செயலாளர் தலையிட வேண்டிய சரியான நேரம் இதுதான். காஷ்மீரில் மக்கள் மிகவும் அச்சத்துடன் இருக்கிறார்கள்" என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
 
இதனை அடுத்து, ஐநா இந்த விஷயத்தில் தலையிட்டு இந்தியா–பாகிஸ்தான் மத்தியில் பேச்சுவார்த்தை நடத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

26 வருடங்கள் காஷ்மீர் போலீசில் பணிபுரிந்த பாகிஸ்தானியர்.. 8 சகோதரர்களுடன் நாடு கடத்தலா?

இனி போலி பாஸ்போர்ட்டில் ஒருவர் கூட வரமுடியாது: மோடி அரசின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு..!

பாகிஸ்தானுக்கு உலக வங்கி $108 மில்லியன் நிதியுதவி.. இந்த நேரத்தில் இது தேவையா?

இந்தியாவில் இருந்து சொந்த நாட்டினர்களை ஏற்க மறுக்கும் பாகிஸ்தான்: எல்லையில் பதட்டம்..!

ஜாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமல்ல.. மதவாரி கணக்கெடுப்பும் உண்டாம்.. மோடியின் ராஜதந்திரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments