ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களில், அந்நாட்டின் ராணுவத் தலைமை தளபதிகள் மேலும் இருவர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. இந்த செய்தி மத்திய கிழக்கு அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் ஆயுதப்படைகளின் பொது ஊழியர்களுக்கான உளவுத்துறையின் துணைத் தலைவர் ஜெனரல் கோலாம்ரெசா மெஹ்ரபி மற்றும் ராணுவ செயல்பாடுகளின் துணைத் தலைவர் மெஹ்தி ரப்பானி ஆகியோர் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர்கள் எப்போது, எந்த இடத்தில் கொல்லப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
முன்னதாக, நேற்று 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி கட்டமைப்புகள், ராணுவ தளவாடங்கள் மற்றும் அலுவலகங்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. இந்த கடுமையான தாக்குதல்களில், ஈரானின் முப்படைத் தலைமை தளபதி உட்பட பல முக்கிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடர் தாக்குதல்கள், இஸ்ரேல் - ஈரான் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது.