Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

Black Friday.. இஸ்ரேல் - ஈரான் தாக்குதலில் பங்குச்சந்தையில் மோசமான சரிவு..!

Advertiesment
பங்குச்சந்தை

Siva

, வெள்ளி, 13 ஜூன் 2025 (09:57 IST)
இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக இந்தியப் பங்குச்சந்தை மிக மோசமாக சரிந்துள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே நேற்றைய பங்குச்சந்தையில் சுமார் 800 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்ததால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்றும் அதே 800 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது.
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 835 புள்ளிகள் சரிந்து 80,854 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 245 புள்ளிகள் சரிந்து 24,630 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் பெல், டாக்டர் ரெட்டி போன்ற ஒரு சில பங்குகள் மட்டுமே சிறிதளவு உயர்ந்துள்ளது என்பதும், மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் படுமோசமாக சரிந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லண்டன் கனவுகள்.. ஜாலியாக எடுத்த கடைசி செல்பி! குடும்பமே காற்றில் கரைந்த சோகம்!