Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஈரானில் ஆட்சி மாற்றம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி கருத்து..!

Advertiesment
ஈரான்

Mahendran

, திங்கள், 23 ஜூன் 2025 (10:57 IST)
ஈரானில் உள்ள தற்போதைய ஆட்சியாளர்களால் ஒரு நல்ல நாடாக அந்நாட்டை உருவாக்க முடியவில்லை, எனவே ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் நடைபெற கூடாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பத்து நாட்களாக போர் நடந்து வரும் நிலையில், திடீரென அமெரிக்கா இந்தப் போரில் களமிறங்கியது. ஈரானின் முக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களை அமெரிக்கப் படைகள் தாக்கிய நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ஈரான் இன்னும் பயங்கர விளைவுகளை சந்திக்கும் என்றும் எச்சரித்தது.
 
இந்த நிலையில், ஈரானில் ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதல்ல. ஆனால், அதே நேரத்தில் தற்போதைய ஈரான் ஆட்சியால் நாட்டை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால் ஏன் ஆட்சி மாற்றம் நடைபெறக்கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
இதனால் அமெரிக்க அதிபர் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை உள்பட 9 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை: வானிலை எச்சரிக்கை..!