Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை இழந்தவர்களுக்கு மரம் நடும் வேலை வழங்கியுள்ள அரசு !

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (23:32 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலகநாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா பல பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மக்களைக் காக்க அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானில் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த 63,000 க்கும் மேற்பட்டோர் மரம் நடும் பணிகளில் அந்நாட்டு அரசு ஈடுபடுத்தியுள்ளது.

அங்கு விவசாயத்திற்காக பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் காடுகள் அழிக்கப்பட்டு வருவதால் பஞ்சம் ஏற்பட்டு வெள்ளம் வரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே,பிரதமர் இம்ரான் கான்  காடுகளை அதிகரிப்பதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 1000 கோடி மரங்கள் நடும் திட்டத்தை கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தார்.தற்போது ஊரடங்கு நேரத்தில் அத்திட்டம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு நிராகரிக்கும்! - அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி!

50 கோடி ரூபாய்க்கு நாய் வாங்கிய பெங்களூர் நபர்! உலகின் விலை உயர்ந்த நாயிடம் என்ன ஸ்பெஷல்?

பேரூர் ஆதீனத்தில் துவங்கிய “ஒரு கிராமம் ஒரு அரச மரம்” திட்டம்! - தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் செயல்படுத்த இலக்கு!

ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டு.. சட்டசபை பதிலுரையை புறக்கணித்த வேல்முருகன்!

பட்டப்பகலில் பட்டாக்கத்தி வீசிய கும்பல்! பிரபல ரவுடி கொடூரக் கொலை! - காரைக்குடியில் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments