Publish Date: Tue, 09 Jun 2020 (23:11 IST)
Updated Date: Tue, 09 Jun 2020 (23:14 IST)
பொதுவாக சூதாட்டத்தில் ஈடுப்பட்ட மனிதர்களைக் கைது செய்ததாகத் தகவல் வெளியாவது வழக்கம். ஆனால் பாகிஸ்தான் நாட்டில் சூதாட்ட வாக்கில் ஒரு கழுதை செயப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் பகுதியில் ரஹீம் யார் கான் என்ர இடத்தில் கழுதைகள் ஓட்டப் பந்தயம் வைத்து சிலர் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் சுமார் 8 பேரை கைது செய்தனர். அவர்களுடம் ஒரு கழுதையைக் கைது செய்துள்ளனர்.