துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விபத்து: விமானி பரிதாப பலி

Mahendran
வெள்ளி, 21 நவம்பர் 2025 (17:28 IST)
துபாயில் நடைபெற்று வந்த சர்வதேச விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் இலகு ரகப் போர் விமானம் சாகச பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி படுகாயமடைந்து உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
 
விமானம் கீழே விழுந்ததும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தின் மீது அடர்ந்த புகை மூட்டம் ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தகவல்படி, விமானி 'நெகட்டிவ் ஜி-ஃபோர்ஸ்' திருப்பத்தில் இருந்து விமானத்தை மீட்டெடுக்க தவறியிருக்கலாம் என்று தெரிகிறது.
 
HAL-ஆல் உருவாக்கப்பட்ட இந்த 4.5வது தலைமுறை விமானம் விபத்துக்குள்ளாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும். மார்ச் 2024 இல் நடந்த முந்தைய விபத்தில் விமானி பாதுகாப்பாக வெளியேறினார். விமான படையை பலப்படுத்தும் இந்தியாவின் முக்கிய திட்டங்களில் தேஜஸ் விமானமும் ஒன்றாகும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விபத்து: விமானி பரிதாப பலி

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுரையில் மெட்ரோ ரயில் ஓடும்: செல்லூர் ராஜூ

விஜய் எங்க வீட்டுப்பிள்ளை.. கோத்துவிடாதீங்க!... பிரேமலதா விளக்கம்!..

18 மாதங்களாக பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 2 கப்பல் தள ஊழியர்கள் கைது.. அதிர்ச்சி தகவல்..!

ஒரே ஒரு வீட்டை தவிர எனது வருமானம் முழுவதையும் கட்சிக்கு தருவேன்: பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments