ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரைக்கு அப்பால், இன்று அதிகாலையில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல கட்டிடங்கள் அதிர்ந்தன. இதை தொடர்ந்து, அதிகாரிகள் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கியிலிருந்து 128 கிலோமீட்டர் கிழக்கே, 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
ரஷ்யாவின் மாநில புவி இயற்பியல் சேவையின் உள்ளூர் கிளை இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவை 7.4 என மதிப்பிட்டுள்ளது. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன என்றும் அது தெரிவித்துள்ளது.
பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், இந்த நிலநடுக்கம் காரணமாக கடற்கரைகளில் ஆபத்தான அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.