ஒசாமா பின்லேடன் பெண் வேடத்தில் தான் பாகிஸ்தான் சென்றாரா? முன்னாள் சிஐஏ அதிகாரி தகவல்

Mahendran
சனி, 25 அக்டோபர் 2025 (10:05 IST)
செப்டம்பர் 11 தாக்குதலுக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலையில் சுற்றி வளைக்கப்பட்டிருந்த அல்-கொய்தா தலைவர் ஓசாமா பின்லேடன், அமெரிக்க இராணுவத்தில் ஊடுருவியிருந்த அல்-கொய்தா மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் பெண் வேடத்தில் பாகிஸ்தானுக்குள் தப்பி சென்றதாக முன்னாள் சிஐஏ அதிகாரி ஜான் கிரியாகோ தெரிவித்துள்ளார்.
 
பின்லேடன் சரணடைவதற்கு முன் பெண்களையும் குழந்தைகளையும் வெளியேற்ற விடியற்காலை வரை நேரம் கேட்டதாகவும், அதற்கு தளபதி ஃபிராங்க்ஸை அந்த மொழிபெயர்ப்பாளர் சம்மதிக்க வைத்ததாகவும் கிரியாகோ கூறினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பின்லேடன் ஒரு பிக்கப் டிரக்கில் இரவில் தப்பிச் சென்றார்.
 
அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பார்வேஸ் முஷாரஃபிற்கு மில்லியன் கணக்கான டாலர்கள் உதவி அளித்ததன் மூலம் அவரை அமெரிக்கா விலைக்கு வாங்கியதாக கிரியாகோ குற்றம் சாட்டினார். இதனால், பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பது போல நடித்துக்கொண்டு, இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை தொடர முஷாரஃப் அனுமதித்தார்.
 
லஷ்கர்-இ-தைபாவிற்கும் அல்-கொய்தாவிற்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்தபோதும், பாகிஸ்தானுடனான உறவு முக்கியம் என்பதால் அமெரிக்கா அதை பெரிதுபடுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments