ஆப்கானிஸ்தானின் தலைவர் மௌலவி ஹைபத்துல்லா அகுந்த்ஸாதா, குனார் ஆற்றுக்கு குறுக்கே அணைகளை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இது பாகிஸ்தானின் நீர்த் தேவைக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும்.
ஆளும் தலிபானின் நீர் வளத்துறை அமைச்சர் முல்லா அப்துல் லத்தீஃப் மன்சூர் இதை உறுதிசெய்துள்ளார். "தங்கள் நீரை நிர்வகிக்கும் உரிமை ஆப்கானியர்களுக்கு உண்டு" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
குனார் ஆறு ஆப்கானிஸ்தானுக்குள் பாய்ந்து, அங்கு காபூல் ஆற்றுடன் இணைகிறது. இந்த நதியே பின்னர் பாகிஸ்தானுக்குள் திரும்பி, சிந்து நதியுடன் இணைவதால், கைபர் பக்துன்வா போன்ற பகுதிகளுக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது.
தலிபான் அணைகளை கட்டினால், ஏற்கனவே இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை கட்டுப்படுத்துவதால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் விவசாயம் மற்றும் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும், ஆப்கானிஸ்தானுடன் இந்த நதி நீரை பகிர்ந்துகொள்ள எந்த ஒப்பந்தமும் இல்லாததால், பாகிஸ்தானால் உடனடியாக தலையிட முடியாது.