Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவை அடுத்து இங்கிலாந்திலும் நோரோ வைரஸ்: மருத்துவமனைகள் நிறைவதாக தகவல்!

Webdunia
வெள்ளி, 27 ஜனவரி 2023 (15:19 IST)
சீனாவில் கடந்த சில நாட்களாக நோரோ வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சீனாவை அடுத்து இங்கிலாந்திலும் நோரோ வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இங்கிலாந்தில் நோரோ வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக அந்நாட்டில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி கொண்டு வருவதாகவும் விரைவில் முழுமையாக நிரம்பிவிடும் என்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
தினசரி நாட்டில் சராசரியாக 371 பேர் நோரோ வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் 8 சதவீதம் அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர் 
 
குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் தான் நோரோ வைரஸ் தாக்குதலுக்கு அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாக இங்கிலாந்து சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்: உத்தரகாண்ட் அரசு அறிவிப்பு..!

தலைமை நீதிபதியை வரவேற்காத அதிகாரிகள்.. தலித் என்பது காரணமா?

சென்னை காந்தி மண்டபம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!

சென்னையில் லாரியை திருடிய ஆசாமி! லாரியில் தொங்கிய போலீஸ்! - பரபரப்பான சேஸிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments