Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு? நாசாவின் அதிர்ச்சி அறிவிப்பு

விக்ரம் லேண்டருக்கு என்ன ஆச்சு? நாசாவின் அதிர்ச்சி அறிவிப்பு
, வெள்ளி, 27 செப்டம்பர் 2019 (08:52 IST)
நிலவின் தென் துருவத்தை ஆய்வுசெய்ய இஸ்ரோ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் சந்திராயன் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ஆகியவை இணைந்து அனுப்பப்பட்டிருந்தது 
 
இந்த சந்திராயன் கடந்த மாதம் ஏழாம் தேதி நிலவில் தரையிறங்கும் போது திடீரென தகவல் தொடர்பை இழந்தது. இதனை அடுத்து விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள இஸ்ரோவும், நாசாவும் தீவிரமாக முயற்சி செய்தும் விக்ரம் லேண்டரில் இருந்து எந்தவிதமான சிக்னலும் பெற முடியவில்லை 
 
webdunia
மேலும் விக்ரம் லேண்டருக்கு உரிய 14 நாள் காலக்கெடு முடிவடைந்து விட்டதால் விக்ரம் லேண்டர்ஃப் நிரந்தரமாக செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ அறிவித்தது. இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா என்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு அது குறித்த புகைப்படங்களை அனுப்பியுள்ளது 
 
சந்திராயன்-2வில் இணைத்து அனுப்பப்பட்டிருந்த விக்ரம் செப்டம்பர் ஏழாம் தேதி நிலவில் உள்ள ஒரு உயரமான, மென்மையான, சமவெளியில் தரையிறங்க முயன்றதாகவும் விக்ரமுக்கு இது ஹார்ட் லேண்டிங் ஆக மாறி விட்டதாகவும், தற்போது விக்ரம் லேண்டர் எங்கே உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை என்றும் கூறியுள்ளது. இருப்பினும் விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க தங்களது விண்கலம் முயற்சி செய்யும் என்றும் நாசா தெரிவித்துள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரயான் போனா என்ன? நாம சந்திரனுக்கே போகலாம்!: இஸ்ரோ சிவன் அதிரடி!