Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை: மெக்ஸிகோ அருகே பயங்கர நிலநடுக்கம்!

7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை: மெக்ஸிகோ அருகே பயங்கர நிலநடுக்கம்!

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (11:20 IST)
மெக்ஸிகோ அருகே தென் பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 8-ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 7 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


 
 
இந்த பயங்கரமான நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லை. அதே நேரத்தில் மெக்ஸிகோ தலைநகரான மெக்ஸிகோ சிட்டி இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
கடலில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை மெக்ஸிகோவின் பல பகுதி மக்கள் உணர்ந்ததாகவும், கட்டிடங்கள் குலுங்கியதாகவும் கூறப்படுகிறது. மக்கள் பதற்றத்தால் வீதிகளுக்கு ஓடி வந்தனர். இதனால் மெக்ஸிகோவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
 
மேலும் கடலின் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மெக்சிகாத, கவுதமாலா, எல் சால்வடார், கோஸ்டாரிகா, நிகாரகுவா, பனாமா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments