Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓடும் வாகனத்தில் இருந்து தப்பிய சர்க்கஸ் புலி: சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்

ஓடும் வாகனத்தில் இருந்து தப்பிய சர்க்கஸ் புலி: சுட்டுக்கொன்ற அமெரிக்க போலீஸ்
, வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (06:21 IST)
அமெரிக்காவில் உள்ள ஒரு சர்க்கஸ் கம்பெனி அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சர்க்கஸ் நிகழ்த்த விலங்குகளை ஒரு வாகனத்தில் ஏற்றி சென்றது. ஆனால் அந்த வாகனம் மாகாணத்தில் இருந்து டென்னிசி மாகாணத்துக்கு கொண்டு சென்றபோது திடீரென வாகனத்தில் இருந்த புலி தப்பியோடியது


 
 
அகோர பசியில் இருந்த அந்த சர்க்கஸ் புலி, அந்த பகுதி மக்களின் செல்லப்பிராணிகளை அடித்து தின்றதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக புலியை சுட்டு கொன்றனர்.
 
இதுபற்றி ஜார்ஜியா மாகாண இயற்கை வளங்கள் துறை விடுத்துள்ள அறிக்கையில், “அட்லாண்டா பகுதியில் உள்ள செல்லப்பிராணிகள் மீது தப்பி ஓடிய புலி தீவிர நாட்டம் காட்டியதால், பொது நலன் கருதி அதை சுட்டுக்கொல்ல வேண்டியதாகி விட்டது” என கூறப்பட்டுள்ளது. இந்தப் புலியை சுட்டுக்கொன்ற செய்தி அறிந்த பின்னர்தான் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூட்கேசில் இருந்த இளம்பெண்ணின் பிணம்: இரண்டு இளைஞர்கள் கைது