Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வடகொரியா மீதான புதிய தடை: அமெரிக்காவின் முடிவுக்கு ஒப்புதல் அளித்த ஐநா!!

வடகொரியா மீதான புதிய தடை: அமெரிக்காவின் முடிவுக்கு ஒப்புதல் அளித்த ஐநா!!
, வியாழன், 7 செப்டம்பர் 2017 (11:50 IST)
வடகொரியாவுக்கு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் கொண்டு செல்வதை நிறுத்த ஐநா சபை அமெரிக்காவின் முடிவிற்கு ஏற்ப ஒப்புதல் அளித்துள்ளது.


 
 
உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா சமீப காலமாக பலமுறை அணு குண்டுகளையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் பல ஏவுகணைகளையும் பரிசோதித்து வருகிறது.
 
இதனால், வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டுவந்து நெருக்கடி கொடுக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. 
 
இதன் ஒரு பகுதியாக, பெட்ரோல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை வடகொரியாவுக்கு கொண்டு செல்வதற்கு தடை மற்றும் வடகொரியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஜவுளி உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் இதற்கு சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரிந்த மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை - எப்போது தெரியுமா?