ஆண் நோயாளிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய நர்ஸ்.. பிரம்படி தண்டனை கொடுத்த சிங்கப்பூர் நீதிமன்றம்..!

Mahendran
சனி, 25 அக்டோபர் 2025 (10:11 IST)
சிங்கப்பூரில் உள்ள ரஃபிள்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்த இந்திய செவிலியரான எலிபே சிவ நாகு , பாலியல் தொல்லை குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதை தொடர்ந்து அவருக்கு ஓராண்டு மற்றும் இரண்டு மாத சிறைத் தண்டனையும், இரண்டு பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஜூன் மாதம், மருத்துவமனைக்கு வந்த ஒரு ஆண் பார்வையாளரை 'நோய்த்தொற்று நீக்கம்' செய்ய வேண்டும் என்று பொய் சொல்லி, எலிபே கழிவறையில் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த செயலால் பாதிக்கப்பட்டவர் மன உளைச்சலுக்கு ஆளானதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
சம்பவத்திற்கு பிறகு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட எலிபே சிவ நாகு, இரண்டு நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு வெள்ளிக்கிழமை அன்று தண்டனை விதிக்கப்பட்டது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.. பிஹார் தேர்தலுக்காக NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்!

தமிழக மக்களை குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.. அண்ணாமலை

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

6 அபாயகரமான நாய் இனங்களுக்கு தடை: மீறி வளர்த்தால் நாய்கள் கைப்பற்றப்படும்: அதிரடி சட்டம்..!

பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்து விடுகிறார்: முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்