ஆக்ஸியம் 4 திட்டத்தின் படி இந்திய வீரர் சுபன்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட விண்வெளி வீரர்கள் குழு புறப்பட்ட ஃபால்கன் ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளியை அடைந்துள்ளது.
இந்த 4 பேர் குழுவின் திட்ட தலைவராக பெக்கி விட்சன் செயல்படுகிறார். இந்த குழுவில் இந்தியாவை சேர்ந்த சுபான்ஷூ சுக்லா, போலந்தை சேர்ந்த ஸ்லாவோஸ் உஜ்நான்ஸ்கி மற்றும் ஹங்கேரியை சேர்ந்த திபோர் கபு ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இந்திய நேரப்படி மதியம் 12.01க்கு அமெரிக்காவின் ஜான் கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்வெளிக்குள் நுழைந்துள்ளது. இந்த விண்கலம் நாளை மாலை 4.30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டு குழுவினர் அங்கு செல்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
41 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் சோயஸ் விண்கலம் மூலமாக விண்வெளிக்கு சென்ற ராகேஷ் சர்மாதான், விண்வெளி பயணம் செய்த முதல் இந்தியராக இருந்து வந்தார். இந்நிலையில் 41 ஆண்டுகள் கழித்து இரண்டாவது இந்தியராக விண்வெளியை தொட்டுள்ளார் சுபன்ஷூ சுக்லா.
Edit by Prasanth.K