Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5500 அணு ஆயுதங்கள்!.. ஜப்பான் அணு ஆயுத நாடாக மாறப்போகுது!.. அலறும் சீனா!...

Advertiesment
appan china
கடந்த சில வருடங்களாகவே உலகமெங்கும் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கிறது. ஒருபக்கம் ரஷ்யாவும் உக்ரைனும் கடந்த சில வருடங்களாகவே போரிட்டு வருகிறது. ரஷ்யா தாக்குதலில் உக்ரைனில் பல கட்டிடங்கள் சேதமடைந்துவிட்டது. அந்நாட்டை சேர்ந்த மக்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஒருபக்கம் இஸ்ரேல் தாக்கியதில் காசா நாடு உருகுலைந்து போனது. காசாவில் பல ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.. பல்லாயிரம் பேர் அந்த நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்..

ஒருபக்கம் ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது என சொல்லி அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது போர் தொடுத்து ஒரு மாதம் முடிந்துவிட்டது. இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈரானும் திருப்பி தாக்கி வருகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிருந்து இருந்து கச்சா எண்ணெய் வருவது தடைப்பட்டிருக்கிறது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ஹோட்டல்களும் மூடும் மூடும் நிலை ஏற்பட்டிருக்கிறது..

ஒருபக்கம் சீனாவும் ஜப்பானும் எதிரில் எதிரி நாடுகளாக பார்க்கப்படுகிறது. கடந்த பல வருடங்களாகவே இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. இந்நிலையில் 5500 அணு ஆயுதங்களை தயாரிக்க போதுமான 44.4 டன் புளுட்டோனியம்  ஜப்பானிடம் உள்ளதாக சீனா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியிருக்கிறது.

இதை பயன்படுத்தினால் மிக குறுகிய காலத்திலேயே ஜப்பான் அணு ஆயுத நாடாக மாறிவிடும் என்றும் ஆபத்தான முறையில் தனது ராணுவத் திறனை ஜப்பான் விரிவுபடுத்தி வருவதாகவும் சீன ராணுவம் எச்சரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி ரோட் ஷோ நடத்தினால் திமுகவுக்கு குஷிதான்!. முக ஸ்டாலின் நக்கல்!..