Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆப்கானிஸ்தானின் குண்டுவெடிப்பு 9 பேர் பலி

blast
, வியாழன், 28 ஏப்ரல் 2022 (23:44 IST)
ஆப்கானிஸ்தானில்  கடந்த வாரம் ஒரு மசூதிக்கு அருகில் உள்ள பள்ளியில் குண்டு வெடித்து, 33 ஷியா பக்தர்கள் உயிரிழந்த நிலையில், இன்றூம் குண்வெடித்ததில், 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  இது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இன்று வடக்கு பகுதியில் இரண்டு இடங்களில் வெடிகுண்டு வெடித்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதல், ஷியா பிரிவினர் வசிக்கும்  பார்க மாகாண தலை  நகர் மசார் –இ- ஷரிபில் இரண்டு வாகனங்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தத் தீவிரவாத அமைப்புகளுக்கும் பொறுப்பேற்கவில்லை எனினிலும்  தலிபான் படையினர் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புத்திசாலிகள் ஆண்களா? பெண்களா? யுனெஸ்கோ அறிக்கை